மரங்கள் 🌳🌳🌳
மரங்கள் 🌳🌳🌳
மனசுக்கு எப்போதுமே
உட்சாகமும், மகிழ்ச்சியும்,
மருத்துவமும் ஊட்டுபவை.
எழுநூறு ஆண்டுகள் நடந்தாலும்
தாண்டி முடியாத
நிழல் கொண்ட மரமொன்று
சுவனத்தில் இருக்கிறது.
ஒரு மரம் 🌳
வேறு எந்த மரத்துடனும்
போட்டி போட்டு வளர்வதில்லை.
தனக்குக் கிடைப்பதைக் கொண்டு
தனது இறைவனைத் துதி செய்து
தனது வாழ்க்கையைத்
தனித்துவமாக வாழ்ந்து முடிக்கிறது.
மரங்களின் கிளைகளில்
இளம் இலைகளுக்கு
முன்னால் முன்னேறிச் செல்ல இடமளித்து
பக்க பலமாக
பின்னால் இருந்து கொள்கின்றன
முதிர்ந்த இலைகள்🌳🌳🌳.
கிளை விட்டு
இலை பிரியும் தருணம் உணர்ந்து
தன்னிடமுள்ள கனிப்பொருட்களையெல்லாம்
அருகிலுள்ள இளம் இலைகளுக்கு
அனுப்பிவிட்டே விடைபெறுகின்றன
முதிர்ந்த இலைகள்.
கீழே விழுந்து கிடந்த
இலைகளையெல்லாம்
குப்பையென்று
பொறுக்கிக்கொண்டிருந்த என் மாணவிகள்
அவர்களைக் கடந்து போன என்னிடம்
"சேர் இந்த இலைகளையெல்லாம் என்ன செய்வது?"
என்று சிரித்துக் கொண்டே
சற்றுக் கிண்டலாகக் கேட்டாங்க.
"உங்க கையில் இருக்கும்
ஒவ்வொரு இலையும்
உங்களைப் போன்றது தான்.
கொடுக்கப்பட்ட கடமைகளைக்
குறையேயில்லாமல் முடித்துவிட்டு
விடைபெற்ற கண்ணியமானவர்கள்.
கண்ணியத்தோடு அடக்கஞ் செய்யுங்கள்.
இறந்தும் பலன் தருவாங்க.
காட்டுமிராண்டிகள் போல
கொளுத்தி விடாதீர்கள்."
என்று கூறிவிட்டுச் சென்று விட்டேன்.
மரங்கள் 🌳🌳🌳,
பூமியின் நுரையீரல்கள்.
மரத்திற்கு மாற்றீடு
இன்னொரு மரம் 🌳 தான்.
நான் படித்த காலத்திலும்
நான் படிப்பிக்கும் காலத்திலும்
ஒக்சிஜனின் அளவு
ஒரேயளவில் தான் இருக்கு.
யாரால?
மரங்களாலும் 🌳🌳🌳 தான்.
மரங்களின் 🌳🌳🌳 வேர்கள்
"பெற்றோராயும்",
கிளைகள், இலைகள்
"பிள்ளைகளாயும்" இருக்கு.
கிளைகள், இலைகள் இல்லையென்றால்
வேர்கள் இல்லையென்று ஆகிடாது.
ஆனால்,
வேர்கள் இல்லையென்றால்
கிளையும் இல்லை.
இலையும் இல்லை.
புனிதப் போருக்கு
பிள்ளைகளை அனுப்புவது போன்றது
#விதைகள்,
விருட்சங்களில் இருந்து பிரிவது.
எல்லாப் பெத்த மரங்களும் 🌳🌳🌳
பிரிந்துசென்ற பிள்ளை "விதைகளை"
மீண்டுஞ் சந்திப்பதேயில்லை.
காற்றினாலும்,
நீரினாலும்,
விலங்குகளாலுங் காவிச் செல்லப்பட்டு
பூமியின் எங்கோ ஒரு இடத்தில்
தமது பெற்றோரின் சேவையைத்
தொடருகின்றன விதைகள்.
ஒரு மரம் 🌳 பற்றிய
சுவாரயமான விஷயம் சொல்கிறன்
பாருங்க.
துருக்கியின் காடுகளில்
"கெம்" என்றொரு மரம் 🌳 இருக்குமாம்.
தரை மட்டமாய் வெட்டி அழித்தாலும்,
தீயிட்டு எரித்தழித்தாலுங் கூட
திரும்பவும் முளைக்குமாம்.
ஒன்றில்,
வேரோடு பிடுங்க வேண்டும்.
இல்லையேல்
அதன் வேர்களுக்கு அருகில்
அதைவிடப் பெரிய்ய🌳 மரமொன்றை
நட வேண்டும்.
அப்பதான் அது சாகுமாம்.
தான் இருக்குமிடத்தில்
தன்னை விடச் சிறந்த ஒருவர்
வருவதை உறுதிசெய்த பின்னரே
அங்கிருந்து இறந்து விலக விரும்புது
"கெம்" மரங்களின் 🌳🌳🌳 மனசுகள்.
ஒவ்வொரு நல்ல மனிதரும்
ஒவ்வொரு நல்ல ஆசிரியரும்
"கெம்" போன்ற மரம் 🌳 தான்.
தன்னைப் போன்ற
தரமான ஆளுமைகளை
தான் இருக்கும் இடத்தில் உருவாக்கிவிட்டே
அங்கிருந்து வேறிடஞ் செல்ல வேண்டும்.
இதுபோல
இன்னுமின்னுஞ் சொல்லலாம்.
மரணித்த பின்னர்
மஞ்சிப் பெட்டியென்று
ஒரு துண்டு மரமாவது 🌳
கல்லறை வரை கூடவே வருவதும்
மகிழ்ச்சிதான் இல்லையா?
அல்ஹம்துலில்லாஹ் ❤
இன் ஷா அழ்ழாஹ்
அதுவுங் கிடைக்கும்.
.
.
முஹம்மத்❤ஸன்ஸீர்.
🌳🌳🌳🌳🌳🌳
28.01.2K22, வெள்ளி.