நபிகளாரின் ❤️
மூன்று பொன்னான அறிவுரைகள்.
அபூ அய்யூப் அல் அன்சாரி (ரழி) அவர்கள்
அறிவிக்கும் ஒரு ஹதீஸ் உள்ளது.
அதில் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து
தமக்கு அறிவுரை கூறுமாறும்,
அதனை சுருக்கமாகக் கூறுமாறும் கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்
மூன்று கூற்றுகளுடன் பதிலளித்தார்கள்:
"நீங்கள் உங்கள் தொழுகைக்காக நிற்கும்போது,
நீங்கள் விடைபெறும் (கடைசித்) தொழுகைபோல தொழுங்கள்.
நீங்களே மன்னிப்பு கேட்க வேண்டியது
என்ற அளவிற்கு எதையும் பேசாதீர்கள்.
பிற மக்களிடம் இருப்பதைப் பெற வேண்டும்
என்ற ஆசையை முற்றாக விட்டு விடுங்கள்."
(சுனன் இப்னு மாஜா : 4169)
.
.
1. இதுவே உங்கள் கடைசித் தொழுகை
என்று எண்ணி ஒவ்வொரு வக்தையும் தொழுங்கள்.
தொழுகைக்கு அப்பால் சிந்திக்காதீர்கள்.
இதுவே வாழ்க்கையில் நாம்
அல்லாஹ்வின் முன் நிற்கும், பிரார்த்தனை செய்யும்
கடைசி நேரமாகக் கூட இருந்துவிடலாம்
என்பதை கவனத்தில் கொண்டு தொழுங்கள்.
பொதுவாக, நம்மில் பெரும்பாலோர்
தொழுகைக்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்று
ஏற்கனவே சிந்தித்த நிலையிலேயே
தொழுகைக்குள் நுழைவதுண்டு.
இந்த சிந்தனை
தொழுகையைத் திசை திருப்பி விடுகிறது.
இதன் விளைவாக,
தொழுகை - உயிரோட்டம் இல்லாததாகவும் ஆகிவிடுகிறது.
"அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப் பெரியவன்.)
என்று கூறித் தொழுகைகளைத் திறப்பதன் மூலம்
மற்ற எல்லாவற்றுடனும் உள்ள எனது உறவை விடவும்
அல்லாஹ்வுடனான எனது உறவை நாம்
முதன்மைப்படுத்துகிறோம்.
.
.
2. நீங்களே பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டிய விதத்தில்
எதையும் பேசாதீர்கள்.
இந்தக் கொள்கையின்படி வாழும்போது
திருமணங்களை, நட்புகளை, நல்லுறவுகளை
வலியிலிருந்தும், பிரிவிலிருந்தும்
பல தருணங்களில் காப்பாற்ற முடியும்.
ஒரு கஷ்டமான உண்மை என்னவென்றால்,
பல அன்பானவர்கள்
ஒரு முரண்பாட்டின் பின்னர்
நல்லுறவிற்கான வாய்ப்பை
மீளப் பெறுவதற்கு முன்பே மரணித்து விட்டனர்.
குடும்ப உறுப்பினர்களோ
தங்களை மன்னிக்க முடியாமல்
தமது வாழ்நாள் முழுவதும் வருந்துகிறார்கள்.
அல்லாஹ்,
உயிர்களை அவை மரணிக்கும் போதும்,
மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி,
பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ
அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்;
மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக)
அனுப்பி விடுகிறான்.
சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு,
நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 39:42)
நாளை முதல் வேலையாகச் சென்று
மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று
எதையும் ஒத்திப் போடாதீர்கள் இன்று.
அப்துல்லா இப்னு உமர் (ரழி) அவர்கள் அடிக்கடி கூறுவார்:
“மாலையில், காலை வரை (வாழ்வதை) எதிர் பார்க்காதீர்கள்.
காலையில், மாலை வரை (வாழ்வதை) எதிர் பார்க்காதீர்கள்”
(புகாரி).
விடியற் காலையில் எழுந்திருக்கப் போகிறோம் என்று
அலாரம் கூட வைத்துக்கொள்வது தான் நமது இயல்பு.
உண்மை என்னவென்றால்,
காரணமே இல்லாமல்
காலையில் எழுந்திருக்காத பலரும்
நம்மில் அத்தாட்சிகளாக இருக்கின்றனர்.
.
.
3. பிற மக்களிடம் இருப்பதைப்
பெறுவதற்கான எந்த ஆசையையும் விட்டுவிடுங்கள்.
மற்றவர்கள் வைத்திருப்பதில்
எதிர்பார்ப்பை இல்லாமல் செய்யுங்கள்.
விரக்தி என்பது பொதுவாக எதிர்மறையான ஒரு விடயமாகும்.
இறைவன் வழங்கியிருக்கும் நிஃமத்துக்களில் விரக்தி இருப்பது
அல்லாஹ்வின் கருணையில்
நாம் விரக்தி கொள்வதாக ஆகிவிடும்.
அல்லாஹ்வின் கருணையில் விரக்தியடைவது
மனித உயர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல.
அது அவனைப் பலவீனப்படுத்துகிறது.
நாம் இந்த உலகத்தை
சாதாரணமாகவே அணுக வேண்டும் என்பது
இதன் அர்த்தமில்லை.
ஏனென்றால்,
எல்லா விஷயங்களிலும்
சிறப்புமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றே
முஸ்லிம்களை ஊக்குவிக்கிறது இஸ்லாம்.
ஆனால் அதற்காக
மற்றவர்களிடம் இருப்பவற்றின் மீது
ஆசையுங், கவலையுங் கொள்வதை நிறுத்தவும்
இஸ்லாம் கண்டிப்பாக வலியுறுத்துகிறது.
நம்மிடம் இருப்பவை
நமது உலக வாழ்வில் போதுமானதாக இல்லை
என்ற மன அழுத்த உணர்வால்
நமது உள்ளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
உலகில் நம்மிடம் உள்ளவற்றைப் பற்றி
அதிருப்தி அடையச் செய்வதற்கு
ஷைத்தான்
இதனையே சிறந்த வழியாகவுங் கொண்டுள்ளான்.
நமது துன்யாவை (இவ்வுலகை)
நிரந்தரமாக கட்டியெழுப்புவதில்
நாம் தொடர்ந்தும் மும்முரமாக இருப்பதால்,
மறுமைக்காக வேலை செய்வதிலிருந்து
நம்மையது திசை திருப்புகிறது.
இம்மையில் உள்ளதைக் கொண்டு திருப்தியடையாத வரை
மறுமைக்கு நாம் ஒருபோதும் தயாராக முடியாது.
.
.
உமர் இபின் கத்தாப் (ரழி) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்,
"உங்கள் தொழுகையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்,
ஏனென்றால் நீங்கள் அதை இழந்தால்,
மற்ற அனைத்தையும் இழக்கிறீர்கள்."
தொழுகையை சரிசெய்வதன் மூலம்
அல்லாஹ்வுடனான உறவை சரிசெய்வோம்.
அல்லாஹ்வுடனான நமது உறவை சரிசெய்வதன் மூலம்,
அனைவருடனும் மற்ற எல்லாவற்றுடனும்
நமது உறவுகளை மேம்படுத்துவோம்.
.
.
உஸ்தாத் நுஃமான் அலி கான் அவர்களின்
விரிவுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி
டாஹ்லியா சாதிக்கின் கட்டுரை.
மொழிபெயர்ப்பும், மேம்படுத்தலும்.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
26.01.2K22, புதன்.